கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது-காவேரி மருத்துவமனை அறிக்கை!

Home > தமிழ் news
By |
கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது-காவேரி மருத்துவமனை அறிக்கை!

திமுக தலைவர் கருணாநிதி கூடுதல் சிகிச்சைக்காக,ஆம்புலன்ஸில் காவேரி மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இதனைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் குவியத்தொடங்கினர். இதனால் காவேரி மருத்துவமனையை சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.தொடர்ந்து அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

 

இந்தநிலையில் சற்றுமுன் கருணாநிதி ஸ்டாலின், ராஜாத்தியம்மாள், கனிமொழி, உதயநிதி என அனைவரும் காவேரி மருத்துவமனக்கு  வந்துள்ளனர். இதேபோல் தொண்டர்களும் அதிகளவில் குவிந்துள்ளனர்.

 

இதற்கிடையே, காவேரி மருத்துவமனையில் இருந்து வெளிநபர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் கருணாநிதி உடல்நிலை சீரடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

இந்த அறிக்கையில், கருணாநிதிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.