'கிரிக்கெட்டின் நெய்மர்' என இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்வேந்திர சாஹலை, ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் கிண்டல் செய்துள்ளார்.

 

நேற்று இங்கிலாந்து-இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது.இதில் இந்திய பந்துவீச்சாளர் சாஹல் பீல்டிங் செய்யும்போது கீழே விழுந்து உருண்டார்.

 

இதனைப் பார்த்த ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 'கிரிக்கெட்டின் நெய்மர்' என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாஹலின் புகைப்படத்தைப் பதிவிட்டு கிண்டல் செய்துள்ளார்.மேக்ஸ்வெல் பாணியில் இந்திய ரசிகர்களும் சாஹல் மைதானத்தில் உருண்டதை, சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துவருகின்றனர்.

 

உலககோப்பை  கால்பந்து போட்டிகளின் போது பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் மைதானத்தில் அடிக்கடி  கீழே விழுந்து உருண்டார்.நெய்மர் மைதானத்தில் கீழே விழுந்து உருண்டு மொத்தம் 14 நிமிடங்களை, இந்த உலககோப்பை போட்டியில் வீணடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS