Looks like you've blocked notifications!

சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தி தண்டனைக்குள்ளான போட்டி நடந்த,  தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடைபெற்றுள்ளது.

 

நேற்று இரவு இந்த மைதானத்திற்கு வந்த பெண் ஒருவர் வாயிலில் நின்ற காவலரிடம், அருகில் சர்ச் ஏதும் உள்ளதா என கேட்டுள்ளார்.

 

பின்பு அங்கிருந்து கிளம்பிவிட்டு, ஐந்து நிமிடம் கழித்து வந்த அந்த பெண் அதே கேள்வியை கேட்கும் போது திடீரென மூன்று பேர் பாதுகாப்பை வேலியை தாண்டி குதித்துள்ளனர்.

 

தொடர்ந்து 15 பேருக்கு மேற்பட்டோர் மைதானத்துக்குள் நுழைய, கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு காவலரிடம் இருந்து சாவியை பறித்துள்ளனர்.

 

தொடர்ந்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்த டிவி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றதோடு, அறைகளின் கண்ணாடிகளையும் உடைத்து சென்றுள்ளனர்.

 

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

BY SATHEESH | APR 5, 2018 11:28 AM #AUSTRALIAN-BALL-TAMPERING-CONTROVERSY-2018 #NEWLANDSCRICKETGROUND #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS