2018-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. நீட் தேர்வினை தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் எழுதினர்.அவர்களில் 45,336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் தோல்வியடைந்த காரணத்தால் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

பொதுத்தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்ற அவர் கடந்தாண்டில் 139 மதிப்பெண்கள் நீட் தேர்வில் எடுத்திருந்தார். இதனால் அவருக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் பணமில்லாத காரணத்தால் பிரதீபா அதில் சேரமுடியவில்லை.

 

தொடர்ந்து இந்த வருடம் நீட் தேர்வு எழுதிய பிரதீபா அதில் 39 மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்தார். அந்த விரக்தியில் அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BY MANJULA | JUN 5, 2018 9:48 AM #NEET #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS