96 BNS Banner
Ratsasan BNS Banner

மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படும் நக்கீரன் கோபால்!

Home > தமிழ் news
By |
மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படும் நக்கீரன் கோபால்!

ஆளுநர் பணியில் தலையிட்டதாக ஆளுநர் மாளிகையின் சார்பாக  அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நக்கீரன் கோபாலை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த போது விமான நிலையத்தில் வைத்து கோபால் கைது செய்யப்பட்டார்.

 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

 

கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு, அடையாறு சரக போலீஸார் கைது செய்தனர்

 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்துச்செல்கின்றனர்.

POLICE, NAKKEERANGOPALARREST, NAKKEERAN GOPAL, ARRESTED