ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. போட்டி முடிந்தபின் இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர். அப்போது முன்னாள் கேப்டன் தோனி நடுவரின் கையில் இருந்த பந்தை கேட்டு வாங்கி சென்றார்.

 

இதனால் அனைத்து சர்வதேசப் போட்டிகளிலும் இருந்து தோனி ஓய்வு பெறப் போகிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக 2014-ம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி முடிந்த பின், திடீரென தோனி தனது ஓய்வு முடிவினை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

BY MANJULA | JUL 18, 2018 6:12 PM #MSDHONI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS