இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

 

இந்தநிலையில் நேற்றைய போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் தோனி செய்த செயல் அனைவரையும்  வியக்க வைத்துள்ளது.நேற்று நடைபெற்ற போட்டியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த போட்டியில் தோனி விளையாடவில்லை. எனினும் இந்திய அணி பேட்டிங் செய்தபோது, பேட்ஸ்மேன்களின் கிட்பேக் சுமந்தபடி அவர் மைதானத்திற்குள் வந்தார். இதேபோல பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீரும் கொண்டு வந்தார்.

 

பொதுவாக அணியின் புதிதாக இடம்பிடித்தவர்களே இந்த வேலையை செய்வார்கள். ஆனால் ஒரு மூத்த வீரராக தோனி செய்த இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதற்காக பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

BY MANJULA | JUN 30, 2018 11:00 AM #MSDHONI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS