Looks like you've blocked notifications!

கலைக்கப்பட்ட நான்கு மாத கருவை தன் கைப்பையில் சுமந்துகொண்டு காவல் நிலையம் வந்த பெண் ஒருவர், தன்னை நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்தியபிரதேச மாநிலம், சாட்னா  மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், காவல்துறை  கண்காணிப்பாளர்  அலுவலகம் வந்து அளித்துள்ள புகாரில் நான்கு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக  குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் அந்த நால்வரும் தன் கருவை கலைக்கச் சொல்லி வற்புறுத்தியதாக கூறிய அந்த பெண், கலைக்கப்பட்ட நான்கு மாத கருவை தன் கைப்பையில் வைத்திருந்தார்.

 

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுத்துள்ள போலீசார்,  நீரஜ் பாண்டே,  தீரஜ் பாண்டே, பிரேம் குமார், ராஜ்குமார் ஆகிய நால்வர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | APR 7, 2018 8:42 PM #RAPE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS