Looks like you've blocked notifications!

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஒருவர், தான் வாங்கிய கோகோ-கோலா குளிர்பான பாட்டிலில் எலி  இருந்ததாகக் கூறி வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

 

உலகம் முழுவதும், குளிர்பானங்கள் வாடிக்கையாளர்களால் பெரிதும் விருப்பப்பட்டு அருந்தப்படுகிறது.

 

இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த டியாகோ பெரேயா, தான் வாங்கிய கோகோ-கோலா குளிர்பான பாட்டிலினுள் ஏதோ வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்துள்ளார்.

 

இதனையடுத்து, அந்த பாட்டிலின் சீல்-ஐ உடைத்து ஒரு பக்கெட்டில் ஊற்றியுள்ளார்.

 

இதனை வீடியோ-ஆக பதிவு செய்த டியாகோ இறுதியில், அந்த பாட்டிலினுள் இறந்த நிலையில் எலி  ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.

 

டியாகோ இந்த வீடியோ-வை இணையதளத்தில் பதிவேற்றியுள்ள நிலையில், கோகோ-கோலா நிறுவனம் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | APR 3, 2018 6:13 PM #DEADMOUSEINCOCA-COLA #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS