Looks like you've blocked notifications!

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், இறந்த தன் தாயின் சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்றுள்ளார்.

 

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த கண்ணன், தன்னுடைய மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் தாயுடன் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளார்.

 

சமீபத்தில் இவருடைய மூத்த மகன் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால், அவருடைய வருமானம் இன்றி குடும்பம் தவித்துள்ளது.

 

இந்நிலையில், கண்ணனுடைய தாய் புவனேஸ்வரி உடல் நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த கண்ணன் யாரும் வராததால், யாருக்கும் தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

 

அதன்படி, அதிகாலை நான்கு மணியளவில் புவனேஸ்வரியின் உடலை பைக்கில் படுக்கவைத்துள்ளார். அவரது உடலை கண்ணனும் அவருடைய மனைவியும் பிடித்துக்கொள்ள, மகன் பைக்கை தள்ளிக்கொண்டு மின்மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

 

உடலை எடுத்துச் செல்லும்வழியில் இதனை கண்ட பொதுமக்கள் அளித்த தகவலறிந்து வந்த போலீசார், புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
 

BY SATHEESH | APR 10, 2018 3:30 PM #DEATH #CHENNAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS