பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் யாரும் வெளியேறாத நிலையில், 2-வது வாரமான இன்று கண்டிப்பாக ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று கமல் தெரிவித்து இருந்தார்.

 

மும்தாஜ், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், பொன்னம்பலம் ஆகிய நால்வரும் பிக்பாஸ் வீட்டின் சக போட்டியாளர்களால் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர்.இதில் பொன்னம்பலம் மற்றும் அனந்த் வைத்யநாதன் இருவரும்  காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார்.

 

முடிவில் மும்தாஜ் மற்றும் மமதி இருவரில் யார்  வெளியேற்றப்படுவார்  என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கடைசியாக மும்தாஜ் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் போட்டியாளராக மமதி வெளியேற்றப்பட்டார்.

 

மமதியின் வெளியேற்றம் தாளாமல் மும்தாஜ் கதறி அழுதார். இறுதியில் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு மமதி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

BY MANJULA | JUL 1, 2018 10:34 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS