மின்னல் தாக்கியதில் இளம் கிரிக்கெட் வீரர் மைதானத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள செரம்போரைச் சேர்ந்தவர் தேபாப்ரதா பால்(21). கிரிக்கெட் ஆல் ரவுண்டரான இவர் தனது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளும் பொருட்டு, கொல்கத்தாவில் உள்ள கிரிக்கெட் அகாடமி ஒன்றில் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

 

இந்தநிலையில், நேற்று மைதானத்தில் தேபாப்ரதா பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. இதைத்தொடர்ந்து கீழே சுருண்டு விழுந்த தேபாப்ரதாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு தேபாப்ரதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BY MANJULA | JUN 11, 2018 12:57 PM #CRICKET #KOLKATA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS