இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சமீபத்தில் நடைபெற்ற கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் தொடரில் வெள்ளி வென்றார். இதையடுத்து, உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்துக்கு ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார்.

 

இந்த நிலையில் அவரது மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வண்ணம் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி வாழ்த்துகளுடன், தனது கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றினை ஸ்ரீகாந்த்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

 

தோனியின் சர்ப்ரைஸ் கிஃப்ட் குறித்து கிடாம்பி ஸ்ரீகாந்த், ''உங்களது அற்புதமான பரிசுக்கு நன்றி தோனி. எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னால் கூற இயலாது,’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | MAY 20, 2018 9:34 PM #MSDHONI #IPL2018 #CSK #KIDAMBISRIKANTH #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS