Looks like you've blocked notifications!

நடப்பு ஐபிஎல்லில் பெங்களூர் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கும் பந்துவீச்சாளர் கேஜ்ரோலியா, முன்னர் ஹோட்டலில் வெயிட்டராகப்  பணியாற்றியுள்ளார்.

 

ஹோட்டலில் பணியாற்றி அதன் மூலம் கிடைத்த பணத்தில், தனது கிரிக்கெட் கனவை கேஜ்ரோலியா நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். கேஜ்ரோலியாவின் திறமையைப் பார்த்த பெங்களூர் அணி ரூ.85 லட்சத்துக்கு இவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

 

இதுகுறித்து கேஜ்ரோலியா கூறுகையில், "இந்தப் பணத்தில் எனது சகோதரியின் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைத்து விட்டேன்.எனது சகோதரரை சி.ஏ படிக்க வைத்து வருகிறேன். விராட் கோலி, டி வில்லியர்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களுடன் விளையாடுவதை நினைத்து பெருமைப்படுகிறேன்,'' என்றார்.

 

ஹோட்டலில்  பணியாற்றியபோது கேஜ்ரோலியா பகுதி நேரமாக பந்துவீச்சுப் பயிற்சியும் எடுத்து வந்துள்ளார். இவரின் பந்துவீச்சு திறமையைப் பார்த்த மற்ற வீரர்கள் தங்கள் அணிக்காக பந்துவீச அழைக்க, நாள் ஒன்றுக்கு ரூ.500 பெற்றுக்கொண்டு மற்ற அணிகளுக்காக கேஜ்ரோலியா விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS