Looks like you've blocked notifications!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 

இந்த ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில், 14 ரன்கள் எடுத்து களத்தில் ஆடிக்கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் கேதர் ஜாதவ் காயம் காரணமாக, 13 வது ஓவரில் "ரிடையர்ட் கட்' முறையில் பெவிலியன் திரும்பினார்.

 

பின்னர், ஆட்டத்தின் இறுதி ஓவரில் களமிறங்கிய கேதர் ஜாதவ், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

 

இந்நிலையில், இந்த போட்டியின் போது ஏற்பட்ட காயம் குணமாக இன்னும் ஒரு மாதம் ஆகலாம் என்பதால், கேதர் ஜாதவ் இனிவரும் போட்டிகளில் ஆடமாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி  தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | APR 9, 2018 6:46 PM #CHENNAI-SUPER-KINGS #IPL2018 #KEDARJADHAV #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS