'காலா' திரைப்படத்தைத் தடையின்றி மாநிலத்தில் ரிலீஸ் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் தனுஷ்,ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

 

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், ''காலா திரைப்படத்துக்கு தடை விதிக்கும் விஷயத்துக்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை.'காலா' திரைப்படம் எந்தெந்த தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன என்ற பட்டியலை மனுதாரர் அளிக்க வேண்டும்.

 

அந்தந்த திரையரங்களுக்கு மாநில அரசு போதிய போலீஸ் பாதுகாப்பை அளித்து, 'காலா' திரைப்படம் தடையின்றி திரையிட வழி செய்ய வேண்டும்'', என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS