Looks like you've blocked notifications!

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சதீஷ்குமார், 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சதீஷ்குமாருக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், கமலஹாசன் தற்போது தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து, கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டாம் முறையாக பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றிருக்கும் வேலுரைச் சேர்ந்த திரு.சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு வாழ்த்துக்கள்!!

 

அவருக்குத் தேவையான உதவிகளை வெற்றிபெறுவதற்கு முன்னரே மாநில அரசு செய்திருக்க வேண்டும். நமது அணி இது போன்ற வெற்றிகளைக் குவித்திட உதவிகள் செய்வது நம் கடமை!", என வாழ்த்தியுள்ளார்.

BY SATHEESH | APR 7, 2018 7:53 PM #KAMALHAASAN #COMMONWEALTHGAMES2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS