Looks like you've blocked notifications!

இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்தில், கீழே விழுந்த உஷா என்ற பெண்மணி இறந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதுகுறித்து, சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய கமலஹாசன், உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் 10 இலட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில், இன்று திருச்சியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற கமலஹாசன், உஷாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் 10 இலட்சம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கியுள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS