ரஜினி,நானா படேகர்,ஈஸ்வரி ராவ்,சமுத்திரக்கனி,ஹீமா குரேஷி, திலீபன், அஞ்சலி ராவ்,சம்பத் என, ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் 'காலா' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.

 

இந்த நிலையில்,'காலா' திரைப்படத்துக்கு பெருமை சேர்க்கும் விதமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதாவது 35 வருடங்கள் கழித்து சவுதி அரேபியாவில் வெளியாகி இருக்கும் ஒரே 'இந்தியப்படம்' என்ற பெருமை தான் அது. இத்தகவலை வுண்டர்பார் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

 

சவுதி இளவரசர் சமீபத்தில் பல கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.இளவரசரின் சினிமா போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடையில்லை என்ற உத்தரவால் மீண்டும் சவுதியில் திரைப்படங்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS