பிறந்தநாளன்று பெண் பத்திரிகையாளர் விபத்தில் இறந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் அங்கையற்கரசி என்பவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்தார். தனது சொந்த ஊருக்கு சென்ற அவரைப் பார்ப்பதற்காக சென்னையில் இருந்து ஷாலினி,பிரபு, ராம்குமார்,சதீஷ், கோகுல் ஆகிய ஐவரும் நேற்று முன்தினம் காரில் திண்டுக்கல் சென்றனர். அங்கயற்கரசியை பார்த்துவிட்டு, நண்பர்கள் ஐவரும் சென்னை திரும்பும் போது பள்ளப்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் நண்பர்கள் ஐந்து பேரும் படுகாயமடைந்தனர்.  தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஐந்து பேரையும் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஷாலினி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவருக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளன்று ஷாலினி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஷாலினியின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், சாலை விபத்தில் மரணமடைந்த ஷாலினியின் குடும்பத்துக்கு ரூபாய் 3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

BY MANJULA | JUL 16, 2018 12:01 PM #ACCIDENT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS