ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவரும் மக்களை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதே நேரம்,நேற்று கர்நாடகாவில் ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்ற விழாவில் பா.ஜ.க அல்லாத அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

 

இந்த 2 நிகழ்வுகளையும் கண்ட குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 

அதில், ''குமாரசுவாமி  பதவியேற்பு விழாவில் ஏதேச்சாதிகார பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்,'' என கேட்டுக் கொண்டுள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS