தனது காதலனை மணப்பதால் அரச குடும்பத்தை விட்டு, ஜப்பான் நாட்டு இளவரசி விரைவில் வெளியேறவிருக்கிறார்.

 

ஜப்பான் மன்னர் அகி ஹிட்டோவின் மூத்த பேத்தி மாகோ (25), பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த கீ கொமுரோ என்ற வாலிபரை காதலித்தார்.இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இவர்கள் இருவருக்கும் வருகிற அக்டோபர் 29-ந்தேதி திருமணம் நடைபெறவுள்ளது. 

 

ஜப்பான் அரச சட்டப்படி சாதாரண குடிமகனை மணந்தால் இளவரசி அரச குடும்பத்தை விட்டு விலக வேண்டும். இதன்படி மாகோ சாதாரண குடிமகன் ஒருவரை மணப்பதன் மூலம் அரச குடும்பத்தை விட்டு வெளியேறவிருக்கிறார்.

 

இதுகுறித்து மாகோ கூறுகையில், "நான் சாதாரண நபரை திருமணம் செய்து கொண்டால் எனது இளவரசி அந்தஸ்து பறிபோய் விடும் என தெரியும்.எங்களின் இருவரது மனமும் ஒத்துப்போய் விட்டதால் அந்த அந்தஸ்து எனக்கு பெரிதாக தெரியவில்லை,'' என்றார்.

BY MANJULA | JUN 27, 2018 12:23 PM #JAPAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS