'புல்வாமா தாக்குதல்'...மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்...'வேட்டையாடிய இந்திய ராணுவம்'!

Home > தமிழ் news
By |

புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட  பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

'புல்வாமா தாக்குதல்'...மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்...'வேட்டையாடிய இந்திய ராணுவம்'!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தற்கொலை படைத்தாக்குதலில்,40க்கும் மேற்பட்ட  சிஆர்பிஎஃப்  வீரர்கள் வீரமரணமடைந்தார்கள்.இந்தியா முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு,உலக நாடுகள் பலவும் தங்களின் கண்டனத்தை தெரிவித்தது. தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய ராணுவத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் இருவரை இந்திய ராணுவம் என்கவுண்டர் செய்திருக்கிறது.பல மணிநேரம் நீடித்த துப்பாக்கிச்சண்டையில் காலி ரஷீத், கம்ரான் என்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

PULWAMAATTACK, CRPFJAWANS, PAKISTAN, JAISH-E-MOHAMMED