ஜாம்நகர் பகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவா நேற்று (திங்கள்) காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கார், சாலையில் அவருக்கு எதிராக வந்துகொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அகிர் என்பவரின் பைக் மீது மோதி விட்டது.

 

இதைத்தொடர்ந்து காரை விட்டு உடனடியாக ரிவா இறங்கியுள்ளார். ஆனால் இந்த விபத்தால் ஆத்திரமடைந்த சஞ்சய், ரிவாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து விவரம் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சஞ்சய்யை தடுத்து நிறுத்தி, ரிவாவை மீட்டுள்ளனர். எனினும் சஞ்சய்யின் தாக்குதலால் ரிவாவுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், பெண் மீது தாக்குதல் நடத்தியதாக சஞ்சய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

நடப்பு ஐபிஎல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS