'நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லையா...இப்படியா சண்ட போடுறது'...மைதானத்திலேயே சண்டையிட்ட இந்திய வீரர்கள்:வைரலாகும் வீடியோ!

Home > தமிழ் news
By |
'நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லையா...இப்படியா சண்ட போடுறது'...மைதானத்திலேயே சண்டையிட்ட இந்திய வீரர்கள்:வைரலாகும் வீடியோ!

பெர்த் டெஸ்ட்டின் போது மைதானத்தில்,இந்திய வீரர்கள் இஷாந்த் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா சண்டையிட்டு கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதனால் இந்திய அணியில் ஒற்றுமை என்பது இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

பொதுவாக  ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிகளின் போது,எதிரணி வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்டுவது வழக்கம்.ஆனால் அதே பாணியை தற்போது இந்திய வீரர்கள் கையாள்வது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில்,இந்திய வீரர்கள் நடந்து கொண்டதே அதனை வெட்ட வெளிச்சமாக காட்டியது.

 

இந்நிலையில் பெர்த் டெஸ்ட்டின் போது மைதானத்திலேயே இந்திய வீரர்கள் இஷாந்த் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா சண்டையிட்ட கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.நான்காவது நாள் ஆட்டத்தின் போது இருவரும் கைகளை நீட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.பலமுறை இருவரும் கோபத்தில் ஏதோ பேசி கொள்கிறார்கள்.இது தொடரவே வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இருவரையும் விலக்கிவிடுகிறார்.

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய பத்திரிகைகள் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளது. இருவரின் வாக்குவாதத்தை அடுத்து இந்திய அணிக்குள் என்னதான் நடக்கிறது,இந்திய வீரர்களின் ஒற்றுமை குலைத்து விட்டதா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

RAVINDRA JADEJA, ISHANT SHARMA, PERTH TEST