‘ஒரே பிரசவசத்தில் 7 குழந்தைகள்’..சுகப்பிரசவமாக பெற்று அசத்திய பெண்!

Home > தமிழ் news
By |

ஈராக் நாட்டில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளை பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஒரே பிரசவசத்தில் 7 குழந்தைகள்’..சுகப்பிரசவமாக பெற்று அசத்திய பெண்!

சுகப்பிரசவம் என்றாலே அதிசயமாக பார்க்கும் இன்றைய காலகட்டத்தில் கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவர் 7 குழந்தைகளை பெற்றுள்ளார். அதுவும் சுகப்பிரசவத்தில் என தெரிவித்திருக்கின்றனர்.

சமீபத்தில் 25 வயது பெண்ணை பிரசவத்துக்காக ஈராக் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அதில் அப்பெண்ணுக்கு அழகான 6 ஆண், 1 பெண் உள்ளிட்ட 7 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிறந்தது. பிரசவத்துக்கு பின் அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன் 1997 -ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. கென்னி-பாப்பே தம்பதிக்கு 4 ஆண், 3 பெண் உட்பட 7 குழந்தைகள் பிறந்தது. கடந்த நவம்பர் மாதம் இவர்கள் 7 பேரும் தங்களது 21 -வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

IRAQ, WOMAN, PREGNANCY, BABIES, VIRAL