Looks like you've blocked notifications!

சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற சென்னை-கொல்கத்தா போட்டியில், சென்னைக்கு எதிரான கடைசி ஓவரை வீசிய வினய் குமார் 17 ரன்களை வாரி வழங்கினார்.

 

வினய்யின் மோசமான பவுலிங் காரணமாக 200 ரன்களுக்கு மேல் எடுத்தும், கொல்கத்தா அணி தோல்வியை சந்திக்கும்படி நேர்ந்தது.இதனால் வினய் குமாரை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதற்கு வினய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் “இது ஒரு கேம் அவ்வளவுதான். டேக் இட் ஈசி கைஸ். இப்போது என்னை விமர்சிப்பவர்கள் ஆர்சிபி அணிக்கு எதிராக 9 ரன்களை விட்டுக் கொடுக்காமல் தடுத்த போதும், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 10 ரன்களை விட்டுக் கொடுக்காமல் தடுத்த போதும் எங்கு இருந்தீர்கள்? சில வேளைகளில் தவறுகள் ஏற்படுவது சகஜம்” என தெரிவித்துள்ளார்.

 

Hey guys take it easy, it’s just a game. Where were you all when I defended 9 runs against RCB and 10 runs against Mumbai Indians!! Sometimes things do go wrong so CHILL....

BY MANJULA | APR 11, 2018 4:46 PM #CHENNAI-SUPER-KINGS #KOLKATA-KNIGHT-RIDERS #CSK #VINAY KUMAR #IPL2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS