Looks like you've blocked notifications!

முதல் ஐபிஎல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

 

முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 165 ரன்களைக் குவித்தது. சென்னை அணி சார்பில் சாகர்,தாஹிர் தலா 1 விக்கெட்டுகளையும் வாட்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

மும்பை அணியில் அதிகபட்சமாக கர்ணால் பாண்ட்யா 41 ரன்களையும், இஷான் கிஷான் 40 ரன்களையும் குவித்தனர்.

 

முதல் போட்டியில் டாஸ் வென்று வெற்றிக்கணக்கைத் துவங்கிய தோனி போட்டியையும் வெல்வாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

புகைப்பட உதவி:@IPL

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS