Looks like you've blocked notifications!

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக, இந்திய கிரிக்கெட் வீரர்  முகம்மது சமி மீது அவரது மனைவி பரபரப்பான குற்றச்சாட்டினை வெளியிட்டிருந்தார்.

 

இதற்கு, ''எனது சொந்த வாழ்க்கை குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை. மிகப்பெரிய சதி எனக்கு எதிராக உள்ளது. எனது புகழை கெடுக்க நடக்கும் முயற்சி இது. எனது விளையாட்டை சீர்குலைக்கும் முயற்சி,'' என முகம்மது சமி பதிலளித்தார்.

 

இந்த நிலையில், மனரீதியாகவும்-உடல் ரீதியாகவும் முகமது சமி தன்னை துன்புறுத்துவதாக அவரது மனைவி ஹாசின் ஜகான் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நாளை பிற்பகல் 2 மணிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, முகமது சமிக்கு கொல்கத்தா காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

 

நடப்பு ஐபிஎல்-லில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக, முகம்மது சமி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS