Looks like you've blocked notifications!

புகைப்பட உதவி @IPL

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான 3-வது ஐபிஎல் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்குத் தொடங்கியது.

 

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, 176 ரன்களை கொல்கத்தா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

 

இதனைத் தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, சுனில் நரைனின் அரைசதம்(17பந்துகள்) பெரிதும் கைகொடுத்தது.

 

ஒருபுறம் விக்கெட்டுகள்(6) வீழ்ந்தாலும் பொறுப்பாக இறுதிவரை களத்தில் நின்ற கேப்டன் தினேஷ் கார்த்திக், 18.5 வது ஓவரில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார்.

 

இதன் மூலம் 4விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் வெற்றியை ருசித்துள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS