நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் போட்டிகளில் பிளே ஆஃப் வாய்ப்பை மும்பை அணி தக்கவைத்துக்கொள்ள, பஞ்சாப் அணி சிக்கலாக்கிக் கொண்டுள்ளது.

 

இந்த நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின் மும்பை அணி வீரர்கள், பஞ்சாப் வீரர்களுடன் சிறிது நேரம் உரையாடினர். அப்போது மும்பை அணியின் ஹர்திக் பாண்டியாவும், பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுலும் தங்களது ஜெர்சிகளை மாற்றிக்கொண்டனர்.

 

கால்பந்து போட்டிகளில் இது வழக்கம் என்றாலும் கிரிக்கெட் போட்டிகளில் இது அபூர்வம் என்பதால், இவர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

நேற்றைய போட்டியின் மூலம் நடப்பு ஐபிஎல் போட்டிகளில் 600 ரன்களைக் கடந்த கே.எல்.ராகுல்(652), ஆரஞ்சு தொப்பியினை தனது வசமாக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS