Looks like you've blocked notifications!

புகைப்பட உதவி @IPL

 

மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 2-வது ஐபிஎல் ஆட்டம் இன்று மாலை நடைபெற்றது.

 

டாஸ்வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது.

 

அடுத்து 167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன்கள் கேஎல் ராகுல், அகர்வால் இணைந்து நல்ல தொடக்கத்தை அளித்தனர்.

 

முதல் ஓவரில் இருந்தே பந்துகளை நாலாபுறமும் தெறிக்கவிட்ட கே.எல்.ராகுல் 14 பந்துகளில், தனது அதிவேக அரைசதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. 

 

மில்லர் 24 ரன்களுடனும், ஸ்டோய்னிஸ் 22 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS