புகைப்பட உதவி @IPL

 

ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 182 ரன்களைக் குவித்துள்ளது.

 

சென்னை அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்சன்(9), டூ பிளசிஸ்(11) இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் அம்பாதி ராயுடு பொறுப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்த வழி செய்தார்.

 

ஆனால் 37 பந்துகளில் 79 ரன்களைக் குவித்த ராயுடு 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன்-அவுட் முறையில் தனது விக்கெட்டை இழந்தார். மறுபுறம் சுரேஷ் ரெய்னா 39 பந்துகளில் (51 ரன்கள்) அரை சதம் கடந்தார்.

 

ராயுடுவைத் தொடர்ந்து களமிறங்கிய தோனி கேப்டனாக பொறுப்புடன் ஆடி 12 பந்துகளில் 25 ரன்களையும், ரெய்னா 43 பந்துகளில் 54 ரன்களையும் எடுத்தனர். இருவரின் ஆட்டத்தால், 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைக் குவித்தது.

 

இதனைத் தொடர்ந்து 183 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, ஹைதராபாத் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS