ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 182 ரன்களைக் குவித்தது.

 

இதனைத் தொடர்ந்து 183 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து திணறியது.

 

20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 178 ரன்களை மட்டுமே எடுக்க, சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

 

சென்னை அணியின் வெற்றியை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றிகுறித்து  சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், ''வீழ்த்திவிடலாம் என்று நினைத்தாயோ "சூதுவாது தெரியாம  @chennaiipl  ட்டயே ச்சலம்பலா. இங்க ஃபேமஸ் தம் பிரியாணிசாப்புட வரல தம் பிடிச்சி வெளயாட வந்தோம் .

 

சாலா பாஹ உந்தி #chahar சிரக தீஸ்தாவுறா ஒப்பனிங் ல இறக்குவோம் @RayuduAmbati பௌலர் க்கு எல்லாம் டெரர் ஆய்டும் அருமை @SunRisers,'' என தமிழ்+தெலுங்கு கலந்து ட்வீட் செய்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS