மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது பிளே-ஆஃப் போட்டியில், முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்தது.

 

இதனையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.1 ஓவரில் 140 ரன்களை எடுத்து, மீண்டும் ஒரு 'திரில்' வெற்றியைப் பதிவு செய்தது.இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறியுள்ளது.

 

இதற்காக சென்னை அணியை ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை வீரர் ஹர்பஜன்சிங்கும் சென்னை அணியை வாழ்த்தியிருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல் நோக்கி வளரும்.@chennaiipl மக்கள் எங்களை விதைகளாய் வித்திட்டார்கள் இன்று அரை இறுதியில் வென்று உங்கள் முன் விஸ்வரூபம் எடுத்துள்ளோம்.மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா.அறம் கூற்று சொல்லும் #நெஞ்சுக்குநீதி,'' என தெரிவித்திருக்கிறார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS