புகைப்பட உதவி @IPl

 

டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின்  டெல்லி டேர்டெவில்ஸ் அணியை,ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.

 

இதில் ‘டாஸ்’ வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்களைச் சேர்த்தது.

 

இதைத்தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19.3 ஓவரில் 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

இந்த தோல்வியால் மும்பை அணியின் பிளே ஆஃப் கனவுகள் தகர்ந்து, ஐபிஎல் தொடரை விட்டும் அந்த அணி வெளியேறியது. அதே நேரம் பிளே ஆஃப்' சுற்றை விட்டு வெளியேறினாலும் சென்னை, மும்பை அணிகளை அடுத்தடுத்து வென்று டெல்லி ஆறுதல் வெற்றிகளை வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS