Looks like you've blocked notifications!

காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தின.


இதனால், சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி,சென்னை அணியின் வீரர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது பஞ்சாப் உடனான போட்டிக்குப் பின் புனே சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் வாட்சன், தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் சிறுவன் ஒருவனுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்துள்ளார்.

 

இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சிறுவனுடன் சரிக்கு சமமாக வாட்சன் விளையாடும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

BY MANJULA | APR 18, 2018 4:14 PM #CHENNAI-SUPER-KINGS #IPL2018 #SHANEWATSON #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS