நடப்பு ஐபிஎல் போட்டிகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்ல ஆரம்பித்துள்ளனர்.அந்த வரிசையில் சென்னை அணியின் இம்ரான் தாகீரும், தனது சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவுக்கு நேற்று திரும்பியுள்ளார். 

 

நாடு திரும்புமுன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என் இனிய தமிழ் மக்களே வந்தோம் வென்றோம் சென்றோம். அடுத்த வருடம் வருவோம் வெல்வோம் செல்வோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. விடை பெறுகிறேன் உங்கள் நினைவுகளோடு,'' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

 

இம்ரான் தாகீரின் இந்த உருக்கமான ட்வீட் சென்னை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருவதுடன், சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS