கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் சென்னை தற்போது 2-வது இடத்துக்கு இறக்கம் கண்டுள்ளது.

 

இந்த நிலையில் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறுகையில், "தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. பீல்டிங் செய்யும் போது கூடுதல் கவனம் தேவை.

 

இந்த விஷயத்தில் மைக் ஹஸ்சி எனக்கு முக்கியமானவராகத் தெரிகிறார். அவர் போன்ற நுட்பமும், அர்ப்பணிப்பும் தேவை என நினைக்கிறேன்.

 

யாருமே ஒழுங்காக பந்து வீசவில்லை. அதனால் தான் கடைசி நேரத்தில் பவுலர்களை மாற்றிக் கொண்டிருந்தேன்.மொத்தத்தில் பேட்ஸ்மேன்களின் வலு என்னவென்பதை பவுலர்கள் தான் கண்டறிய வேண்டும்,'' என்றார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS