Looks like you've blocked notifications!

'ஐபிஎல்' போட்டி நடத்தக்கூடாது என, சூதாட்டத்தில் சிக்கி சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 

இதுதொடர்பாக சம்பத்குமார் தனது மனுவில் தெரிவித்திருப்பதாவது:-

 

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்ட வழக்கில் அணிகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. சூதாட்டத்தைத் தடை செய்யாமல் 'ஐபிஎல்' போட்டி

நடத்தக்கூடாது. சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு பிசிசிஐ, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் மீதான மறுவிசாரணை, வரும் ஏப்ரல் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS