பெங்களூருக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 205 ரன்கள் எடுத்தும் மோசமான பவுலிங் காரணமாக பெங்களூர் அணி மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது.

 

இந்த நிலையில், பெங்களூரு பந்துவீச்சாளர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக கேப்டன் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதமாக அறிவித்துள்ளது.

 

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி முதல் முறையாக நடத்தை விதிகளை மீறிப் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது என இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஐபிஎல்லில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 2 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன்  புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS