நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் ஹைதராபாத்துக்கு எதிராக 128 ரன்களைக் குவித்தார். குறிப்பாக 'டெத்' ஓவர்களில் மிரட்டும் புவனேஷ்வர் குமாரின் ஓவரில் 43 ரன்களை விளாசினார்.

 

புவனேஷ்வர் குமாரை இந்த ஐபிஎல் தொடரில் வெளுத்து வாங்கிய ஒரே வீரர் ரிஷப் பண்ட் மட்டும் தான். 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உட்பட புவனேஷின் 11 பந்துகளில் ரிஷப் 43 ரன்களைக் குவித்தார். அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூட புவியின் பந்துகளை அடித்து ஆடத்தயங்கும் போது,ரிஷப் அவரின் பந்துகளில் வாணவேடிக்கை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

 

இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் சதமடித்த 'முதல் இந்தியர்' என்ற பெருமையும் ரிஷப்புக்கு கிடைத்துள்ளது. தற்போது ஹைதராபாத் பவுலர்களைப் பிரித்து மேய்ந்த ரிஷப்பை கிரிக்கெட் பிரபலங்கள், நடிகர்-நடிகையர் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

 

இதனால் ரிஷப் இந்தியளவில் ட்விட்டரில் தொடர்ந்து  ட்ரெண்டாகி வருகிறார்.

BY MANJULA | MAY 11, 2018 6:34 PM #IPL2018 #DELHI-DAREDEVILS #SUNRISERS-HYDERABAD #RISHABHPANT #BHUVNESHWARKUMAR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS