மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்களுக்கு சுருண்டது.

 

இதனைத் தொடர்ந்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, யாரும் எதிர்பாராதவிதமாக 87 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

 

இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது. இந்த நிலையில் தோல்விக்குப்பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில், "மும்பை பேட்ஸ்மேன்கள் ஒழுங்காக விளையாடாததே தோல்விக்குக் காரணம். தனிப்பட்ட முறையில் நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை,'' என்று விளக்கமளித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS