நேற்றிரவு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

 

இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு ராஜஸ்தான் அணிக்கு வெகுவாகக் குறைந்துள்ளது. எனினும், கடைசி ஆட்டத்தில் (19-ம் தேதி) பெங்களூர் அணியை வீழ்த்தினால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அந்த அணிக்கு உள்ளது.

 

இந்தநிலையில், அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் மற்றும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இருவரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நாட்டுக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளதால் பட்லர், ஸ்டோக்ஸ் இருவரும் விரைவில் இங்கிலாந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனால் தொடர்ந்து நிலைத்தன்மை இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, பட்லர்-ஸ்டோக்ஸ் இருவரின் விலகல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS