Looks like you've blocked notifications!

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 14-வது ஐபிஎல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், விராட் கோலியின் பெங்களூர் அணியும் நேரடியாக மோதிக் கொண்டன.

 

இதில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியைத் தோற்கடித்து, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது 13-வது ஓவரில் பீல்டிங் செய்த ஹர்திக் பாண்ட்யா கீப்பரை நோக்கி பந்தை வீசினார்.

 

ஆனால் அது எதிர்பாராதவிதமாக இஷான் கிஷன் கண்ணில் பட்டு அவருக்கு காயத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் உடனடியாக மைதானத்தை விட்டு இஷான் வெளியேறினார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

 

இந்த நிலையில் நடந்த இந்த சம்பவத்துக்காக ஹர்திக் பாண்ட்யா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என்னை மன்னித்து விடு குட்டிப்பையா,'' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS