டெல்லி அணியின் கேப்டன் பதவியிலிருந்து தான் விலகுவதாக கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார். கம்பீரின் இந்த முடிவைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் தனக்கு சம்பளம் வேண்டாம் என்று கவுதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கவுதம் விட்டுக்கொடுத்துள்ள சம்பளத்தொகை மட்டும் சுமார் 2.80 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

 


பஞ்சாப் அணியுடனான போட்டியில் தோல்விக்குப்பின்  அணியில் இருந்து விலகிவிட கம்பீர் முடிவு செய்ததாகவும், ஆனால் அணி நிர்வாகத்தினர் சமாதானம் செய்ததையைடுத்து அவர் அந்த முடிவை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS