நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி 3-வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு சென்னையின் ஓபனிங் பேட்ஸ்மேன் வாட்சன் 117 ரன்கள் எடுத்து உறுதுணையாகத் திகழ்ந்தார்.

 

இந்த நிலையில், சென்னை கேப்டன் தோனி ஷேன் வாட்சனுக்கு புதுப்பெயர் ஒன்றை சூட்டி மகிழ்ந்துள்ளார்.

 

இதுகுறித்து தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி. மும்பை இன்று மஞ்சள்நிறத்தில் மாறி எங்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்கும் நன்றி. ஷேன் ”ஷாக்கிங்” வாட்ஸன் அனைவருக்கும் இன்பஅதிர்ச்சி தரக்கூடிய இன்னிங்ஸை விளையாடியிருக்கிறார். இந்த சீசன் மிக இனிமையாக முடிந்தது.'' எனத் தெரிவித்துள்ளார்.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS