கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள சென்னை அணி ஹைதராபாத் சென்றுள்ளது. அப்போது அவர்களை சந்திக்கச் சென்ற அம்பாதி ராயுடு மொத்தமாக அனைவருக்கும் பிரியாணி வாங்கி சென்றுள்ளார்.

 

ஆனால் ஹோட்டல் நிர்வாகம் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப்பொருட்களை உள்ளே வைத்து சாப்பிட முடியாது என்று, கறாராக சொல்லி விட்டதாம். தோனி நேரடியாக சென்று கேட்டும் அவர்கள் மறுத்து விட்டனராம்.

 

இதனைத் தொடர்ந்து ஹோட்டல் வெளியே வந்த தோனி அங்குள்ள பார்க்கிங் பகுதியில் அமர்ந்து, சக வீரர்களுடன் பிரியாணி சாப்பிட்டிருக்கிறார்.

 

இந்த சம்பவம் நடந்து முழுதாக 4 வருடங்கள் கடந்து விட்டன. இன்று தோனியின் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள அம்பாதி ராயுடு, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அடித்து ஆடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS