புகைப்பட உதவி @IPL

 

ஐபிஎல் போட்டியின் 35-வது ஆட்டம் புனேவில் இன்று மாலை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

 

அதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூர் அணி 127 ரன்கள் சேர்த்தது.

 

பெங்களூர் அணியில் அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 59 ரன்களும், டிம் சவுத்தி 36 ரன்களும் எடுத்தனர்.சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இதனைத்தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து இலக்கை எட்டியது.

 

சென்னை அணியில் அதிகபட்சமாக ராயுடு 32 ரன்களும், தோனி 31 ரன்களும் சேர்த்தனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS