ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான்,முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி உட்பட அனைத்து வீரர்களும் பாரம்பரிய ஆடை அணிந்து, இன்று காலை மைதானத்தில் ரம்ஜான் கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் கட்டி அனைத்து வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

மற்றொருபுறம் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 109 ரன்களுக்கு சுருண்டது.

 

இதனைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாட விரும்பாமல் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

BY MANJULA | JUN 15, 2018 3:55 PM #INDVSAFG #BANGALORE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS